ஆறால் அடித்த அடி...
ஆறு அடி போடும் படி அசுரன் போர்ப் பறை கொட்டி அழைத்ததால் நான் போட்ட ஆறு அடி :-
எனக்குப் பிடித்த உலகத் தலைவர்களுள் அறுவர்
1. அன்னை இந்திரா காந்தி (அரசியல் தொலை நோக்குடன் பங்களா தேசத்தை உருவாக்கியதில்)
2. ஆபிரஹாம் லிங்கன் (அமெரிக்க அடிமை ஒழிப்பில்)
3. மிகாயீல் கார்ப்பசேவ் (நிறைய சுதந்திர நாடுகள் தோன்றியதற்கு)
4. ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவின் உறக்கத்தைக் கெடுப்பதால்)
5. மஹ்மூத் அஹ்மதி நெஜாத் (அமெரிக்காவை எச்சரிப்பதால்)
6. நெல்சன் மண்டேலா ( தென்னாப்பிரிக்க விடுதலையில்)
எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் அறுவர்
1. தேவன்
2. தி.ஜானகிராமன்
3. லா.ச.ராமாமிருதம்
4. கி.ராஜநாராயணன்.
5. ஜெயகாந்தன்
6. தோப்பில் முஹம்மது மீரான்
எனக்குப் பிடித்த திரைப் படங்களுள் ஆறு
1. தேவதாஸ்
2. தியாகம்
3. நவராத்திரி
4. நான் ஏன் பிறந்தேன்
5. அவள் அப்படித்தான்
6. ஆறிலிருந்து அறுபதுவரை
எனக்குப் பிடித்த கவிஞர்களுள் அறுவர்
1. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
2. கவியரசு கண்ணதாசன்
3. மீரா
4. நா.காமராசன்
5 மு.மேத்தா
6. நீலமணி
மறக்க முடியா நாவல்/ புதினங்களுள் ஆறு
1. கல்கியின் சிவகாமியின் சபதம்
2. தேவனின் துப்பறியும் சாம்பு
3. ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சிலமனிதர்கள்
4. இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள்
5. மு.மேத்தாவின் சோழநிலா
6. தோப்பிலின் ஒரு கடலோர கிராமத்தின் கதை
எனக்குப் பிடித்த ஊர்களுள் ஆறு
1. நான் பிறந்த மண்
2. உதகமண்டலம்
3. பெங்களூர்
4. திருவனந்தபுரம்
5. ஆம்பூர்
6. குற்றாலம்
நான் காணவிரும்பும் நாடுகளுள் ஆறு
1. ஸ்விட்சர்லாந்து
2. ஜப்பான்
3. ஜெர்மனி
4. ப்ரான்ஸ்
5. சிங்கப்பூர்
6. இத்தாலி
எனக்குப் பிடித்த உணவு வகைகளுள் ஆறு
காலைச் சிற்றுண்டிககு
1. முதல் நாள் இரவில் மண்சட்டியில் சமைத்து வைத்த சுறாமீன் குட்டியை
மறுநாள் காலை அரிசிமாவில் செய்த உரொட்டியுடன் உண்டு கறுப்புத் தேநீர் பருகுவது (கிடைப்பது வெகு அரிது!)
2. இடியப்பமும் ஆட்டிறைச்சியும்
3. அப்பமும் உருளைக் கிழங்கும்
4. பழைய சோறும் கட்டித் தயிரும் நெல்லிக்காய்த் தொகையலும்
நண்பகல்
5. வெண் சோற்றில் தேங்காய்ப் பால்க் குழம்பும் புளித் தொகையலும் சேர்த்து, பொரித்த குதிப்பு மீன் கருவாட்டுடன் உண்ணும் உணவு..( நெஞ்சு வரை சோறு ஏறும்... இப்போதெல்லம் அருகி விட்டது)
இரவில்
6. அரிசிமா உரொட்டியுடன் கோழி இறைச்சி
(சப்பாத்தி, பூரி, பரோட்டா பிரியானி போன்ற முகலாய / வட இந்திய உணவுகள் பஞ்சத்துக்கு மட்டும்...)
ஆறில் வலை வீச நான் அழைக்கும் வலைஞர்களில் அறுவர்
1. குழலி
2. பன் பட்டர் ஜாம்
3. நாமக்கல் சிபி
4. தி.ராஸ்கோலு
5. பகுத்தறிவாளன்
6. போலி டோண்டு :-)
குறிப்பு;-
போலி டோண்டுவின் ரசிகர் மன்றத்திற்கு விண்ணப்ப அடி போட்டேன். அது வ(ப)லித்ததா இல்லையா எனத் தெரியவில்லை